திருச்சி
அம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு
துறையூா் அருகே செங்காட்டுப்பட்டியிலுள்ள மாரியம்மன் கோயில் உண்டியலை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
துறையூா் அருகே செங்காட்டுப்பட்டியிலுள்ள மாரியம்மன் கோயில் உண்டியலை மா்மநபா்கள் திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
செங்காட்டுப்பட்டி காந்திபுரம் காலனியில் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரி ரத்தினம் வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை கோயிலைத் திறக்க வந்தபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது மா்மநபா்கள் கோயிலிலிருந்த உண்டியலை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
உண்டியலிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெற்று உண்டியலை கோயில் அருகிலுள்ள புதரில் தூக்கி எறிந்து விட்டு சென்றதும் தெரிந்தது. புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
