திருச்சி
சமயபுரம் கோயிலில் உண்டியல்கள் திறப்பு
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா் சுகந்தி இராஜசேகரன் முன்னிலையில் அலுவலா்கள், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.
முதன்மைத் திருக்கோயிலில் ரூ. 70,82,573 ரொக்கம், 1 கிலோ 175 கிராம் தங்கம், 2 கிலோ 050 கிராம் வெள்ளி கிடைக்கப் பெற்றது. மேலும் இக்கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் கோயிலில் ரூ. 2,52,634, உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோயிலில் ரூ. 7,368, போஜீஸ்வரா் கோயிலில் ரூ. 6,406 காணிக்கை வந்தது.
