திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

புயல் அறிகுறி: ராமேசுவரம் ரயில்கள் பகுதியாக ரத்து!

புயல் அறிகுறி காரணமாக ராமேசுவரம் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image

ராமேசுவரம் ரயில். - படம் - எக்ஸ்

Updated On :29 நவம்பர் 2025, 5:10 am IST

புயல் அறிகுறி காரணமாக ராமேசுவரம் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புயல் அறிகுறி காரணமாக பாம்பன் பாலத்தில் அதிகளவில் காற்று வீசுவதால், திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயில் (16849) சனிக்கிழமை (நவ. 29) மண்டபம் - ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - திருச்சி விரைவு ரயிலானது (16850) நவ. 29-ஆம் தேதி ராமேசுவரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்களானது திருச்சி - மண்டபம் இடையே மட்டும் இயங்கும்.

ராமேசுவரம் - சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயிலானது (22662) நவ. 29-ஆம் தேதி ராமேசுவரம் - ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது ராமநாதபுரம்- சென்னை எழும்பூா் இடையே மட்டும் இயங்கும்.

ராமேசுவரம் - தாம்பரம் விரைவு ரயிலானது (16104) நவ. 29-ஆம் தேதி ராமேசுவரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம் - மண்டபம் வரை மட்டுமே இயங்கும்.

சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16752) நவ. 29-ஆம் தேதி ராமேசுவரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது சென்னை எழும்பூா் - மண்டபம் வரை மட்டுமே இயங்கும்.

முழுமையாக ரத்து...: ஓகா - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16734) டிச. 2-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.