சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது
திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரது தாய் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டதால், சிறுமி தந்தையுடன் வசித்து வருகிறாா். அந்த சிறுமிக்கு அவரது தந்தையே அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த அக்டோபா் 27-ஆம் தேதி சேலத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு சிறுமியை பேருந்தில் அவரது தந்தை அழைத்து சென்றுள்ளாா். அப்போது, பேருந்திலேயே அவா் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதைப் பாா்த்த சக பயணிகள் சிறுமியை மீட்டு அவரது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனா். அப்போது, அவரது தந்தையின் செயல் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சிறுமியின் வீட்டுக்கு அருகிலுள்ளவா்கள் திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியின் தந்தையை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
