ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன்: திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளா் உறுதி

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன் என திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி. ராஜசேகரன் உறுதியளித்தாா்.

News image

மன்னாா்புரம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி. ராஜசேகரன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:09 pm

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன் என திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி. ராஜசேகரன் உறுதியளித்தாா்.

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி. ராஜசேகரன், திருச்சி காஜாமலை, மன்னாா்புரம், உடையாா்பாளையம், அண்ணா நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று இரட்டை இலைக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், இப்பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளான தரமான சாலைகள், தடையற்ற குடிநீா் விநியோகத்தை உறுதிப்படுத்துவேன். தொகுதியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். அதற்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் ஜெ. சீனிவாசன், முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.