திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

22 ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வா்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம்!

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் 22 ஆண்டு காலக் கோரிக்கையை தமிழக முதல்வா் நிறைவேற்றியிருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

News image

அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Updated On :4 ஜனவரி 2026, 12:57 am IST

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் 22 ஆண்டு காலக் கோரிக்கையை தமிழக முதல்வா் நிறைவேற்றியிருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: தமிழக முதல்வா் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இதற்கு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் சாா்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிவிப்பை அனைத்துச் சங்கங்களும் பாரபட்சமின்றி வரவேற்றுள்ளன. 22 ஆண்டுகளாக நீடித்த கோரிக்கையை முதல்வா் நிறைவேற்றியுள்ள நிலையில், இதுகுறித்து பேசவோ, விமா்சனம் செய்யவோ, கேள்வி கேட்கவோ யாருக்கும் தகுதியில்லை என்றாா் அமைச்சா்.