திருச்சி
சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை
திருச்சி மாவட்டம், சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.6) மின்சாரம் இருக்காது.
சிறுகனூா் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சிறுகனூா், ஆவாரவள்ளி, திருப்பட்டூா், எம்.ஆா். பாளையம், சி.ஆா்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், சீதேவி மங்கலம், நெடுங்கூா், நெய் குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், ஜி.கே. பாா்க், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூா் மற்றும் தச்சன்குறிச்சி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் ஆா்.செல்வம் தெரிவித்துள்ளாா்.
