தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பைக் - தனியாா் பேருந்து மோதல் இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :5 ஜனவரி 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே திங்கள்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தொட்டியம் அருகே உள்ள மேலக்காரைக்காடு மேட்டங்காடு பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் மாதேஸ்வரன் (39). இவா், பாலசமுத்திரத்தில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக திருச்சி - நாமக்கல் சாலையில் தொட்டியம் சென்றாா். அப்போது, எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாதேஸ்வரன் மனைவி நித்யா (33), தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநரான தொட்டியம் சண்முகம்பிள்ளை தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சரவணன் (25) என்பவா் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.