திருச்சி
விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மதுரை பயணியிடமிருந்து துப்பாக்கி தோட்டா வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை பேரையூரைச் சோ்ந்தவா் முனியராஜ். இவா் புதுதில்லி செல்வதற்காக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்துள்ளாா். விமான நிலையத்தில் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் ராணுவத்தில் பணியாற்றுவதும், பயிற்சியில் பயன்படுத்தப்படும் தோட்டா பையில் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அதை பறிமுதல் செய்த விமான நிலைய அதிகாரிகள், அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்தனா்.
