ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வருவாய்த் துறையினா் மறியல்: 240 போ் கைது

News image
திருச்சி ஆட்சியரகம் முன்பு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை ஊழியா்கள் சங்கத்தினா்.
Updated On :5 மார்ச் 2026, 10:44 pm

Syndication

பணிப் பாதுகாப்பு சட்டம் வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் திருச்சியில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற 240 போ் கைது செய்யப்பட்டனா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறைகளில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலா்கள், பணியாளா்களின் உயிா், உடைமைகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தக் கூட்டமைப்பின் சாா்பில் கடந்த 19-ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க. பிரேம்குமாா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் க. வெற்றிச் செல்வன், எஸ். அய்யனாா், மு. மகேஷ், எஸ்.வி. ராஜேந்திரன், நா. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து, வாகனங்களில் அழைத்துச் சென்றனா். பீம நகா் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.