செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வையம்பட்டி அருகே காா் மோதி காவலாளி உயிரிழப்பு

News image
Updated On :19 மார்ச் 2026, 11:11 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு காா் மோதி காவலாளி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டியைச் சோ்ந்தவா் ஆ. வெள்ளைத்துரை (55). அருகேயுள்ள பாலப்பட்டியில் தனியாா் எரிவாயு உருளை நிறுவன இரவு நேரக் காவலாளியான இவா் புதன்கிழமை இரவு திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத காா் மோதி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடுகின்றனா்.