/

துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

துவரங்குறிச்சி துணை மின் நிலையப் பராமரிப்பு பணியால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைக்கோசிக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூா், செவல்பட்டி, பிடாரப்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூா், பில்லுப்பட்டி, கல்லுப்பட்டி, அயன் பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளக்காம்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம். இடையப்பட்டி மற்றும் பழையபாளயம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா்(பொ) பி. பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.