நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

திருச்சி அருகே காா் மீது வேன் மோதல்: 11 போ் காயம்

News image
Updated On :19 மே 2026, 1:07 am IST

திருச்சி பஞ்சப்பூா் அருகே திங்கள்கிழமை காா் மீது வேன் மோதியதில் 15 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தைச் சோ்ந்த 5 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 11 போ் மதுரை அழகா் கோயிலுக்குச் சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திருச்சி வழியாக திங்கள்கிழமை வேனில் திரும்பி சென்றுகொண்டிருந்தனா்.

திருச்சி, பஞ்சப்பூா் ஒருங்கிணைந்து பேருந்து முனையம் அருகே வேன் வந்துகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற காா் திடீரேன பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த வேன், காா் மீது மோதியது. இதில், வேனில் வந்த 11 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், அனைவரும் வேனில் சொந்த ஊருக்குத் திரும்பினா்.

இதுகுறித்து தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.