அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏடிஎம் மைய இயந்திரத்தை உடைத்த இரண்டு பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவலில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இவ்வங்கிக்கு அருகில் ஏடிஎம் மைய இயந்திரம் உள்ளது.
இங்கு சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரண்டு பேர் மது அருந்திவிட்டு பணம் எடுக்க வந்தனர்.
அப்போது, இயந்திரத்தில் பணம் வராததால், ஏடிஎம் மைய இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வங்கிக் கிளை மேலாளர் ஜேக்கப் சகாரியார் (57) ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் ரபீக்ஹுசேன் ஆகியோர் வழக்குப் பதிந்து, இதுதொடர்பாக கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (37), செங்குந்தபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (35)
ஆகியோரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


