ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சக்கர நாற்காலிகள் வழங்கல்

திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்-மாணவர்கள் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:24 am

DIN

திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்-மாணவர்கள் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
 இப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் இந்த நல உதவிகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் இன்பராணி தலைமை வகித்தார். குழந்தைகள் தின விழாவையொட்டி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மணிவண்ணன் கலந்து கொண்டு சுகாதாரம் மற்றும் கல்வியறிவு குறித்து பேசினார். பின்னர், அவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் வழங்கப்பட்ட நோயாளிகள் அமர்ந்துசெல்லும் சக்கர நாற்காலிகளை பெற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.