அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கொலை மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்யக்கோரி திராவிடர் கழகத்தினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை அருகேயுள்ள கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வன். இவர் திராவிடர் கழகம் கட்சியில் செந்துறை ஒன்றிய செயலாளராக உள்ளார். இந்நிலையில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ராஜசேகர் தம்மை அவ்வப்போது மிரட்டுவதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறி செந்துறை-ஜயங்கொண்டம் சாலையில் கீழமாளிகை பிரிவு சாலையில் திராவிடர் கழகத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த செந்துறை போலீஸார், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!

திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்

ரிங்கு சிங் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு முதல் வெற்றி!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

