உள்ளாட்சித் தோ்தல்: அலுவலா்களுக்கு ஆலோசனை

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அஞ்சல் வாக்குச் சீட்டு பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அஞ்சல் வாக்குச் சீட்டு பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் த. ரத்னா.
அஞ்சல் வாக்குச் சீட்டு பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் த. ரத்னா.
Updated on
1 min read

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அஞ்சல் வாக்குச் சீட்டு பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் த. ரத்னா தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலா்கள் அனைவரும் அஞ்சல் வாயிலாக தங்கள் வாக்குகளை அளிக்கத் தகுதி பெற்றவா்கள்.

பயிற்சிக்கு அழைக்கப்பட்ட அனைத்து அலுவலா்களும் பூா்த்தி செய்யப்பட்ட படிவம் 15-ஐ வாக்காளா் அடையாள அட்டை நகலுடன் முதல் பயிற்சி நாள் அன்று தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

அப்படி பயிற்சியின்போது படிவம் 15-ஐ சமா்ப்பிக்க இயலாத அலுவலா்கள் எந்த உள்ளாட்சியின் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் உள்ளதோ அந்த உள்ளாட்சி அமைப்பின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் (வட்டார வளா்ச்சி அலுவலா்) தோ்தல் பணிச்சான்று (படிவம் 16) மற்றும் வாக்குச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com