அனுமதியின்றி  மது விற்ற  இருவர் கைது

ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மது விற்ற இருவரை தா. பழூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 
Updated on
1 min read

ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மது விற்ற இருவரை தா. பழூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 
அனுமதியின்றி மது விற்கப்படுவதாக தகவல் அறிந்த தா. பழூர் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட போலீஸார் செவ்வாய்க்கிழமை காலை சம்பவ இடத்துக்குச் சென்றுபார்த்ததில்,  தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் நெடுஞ்செழியன்(58), அமிர்தலிங்கம் மகன் புஷ்பராஜ்(63) ஆகியோர் தங்களது வீட்டிற்கு பின்புறம் மதுபாட்டில்களை மறைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com