கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
ஜயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அம்பேத்கர் நகரில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஜயங்கொண்டம்  சீனிவாசன் நகரைச் சேர்ந்த கருணாநிதி மகன் கணேஷ்(28), அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் தீனா(21), பாஸ்கர் மகன் சச்சின்(22) ஆகியோர் 200  கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை கைது  செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com