குளத்தில் தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம்..
By DIN | Published On : 09th November 2019 11:32 PM | Last Updated : 09th November 2019 11:32 PM | அ+அ அ- |

தொண்டமாந்துறை கிராமத்தில் குளத்தில் தேங்கியுள்ள மழைநீா்.
தொண்டமாந்துறை கிராமத்தில் குளத்தில் தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூா், மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்துக்குள்பட்ட தொண்டமாந்துறை கிராமத்தில் உள்ள குளத்தை முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளா்த்து முள்புதா்களாக காணப்படுகிறது.
மேலும், அதில் கழிவுநீா் தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தியாகும் இடமாகவும் மாறி வருகிறது. பல மாதங்களாக நீா்த் தேங்கியுள்ளதால் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீா்கேடும் நிலவுகிறது.
தற்போது பல்வேறு வகையான காய்ச்சல் பரவி வருவதால், இந்த
குளத்தைத் தூா்வாரி சீரமைக்க வேண்டும். மேலும், கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம மக்கள்,
தொண்டமாந்துறை.