வீரமாமுனிவா் சிலைக்கு மாலை அணிவிப்பு
By DIN | Published On : 09th November 2019 08:37 AM | Last Updated : 09th November 2019 08:37 AM | அ+அ அ- |

ஏலாக்குறிச்சியில் உள்ள வீரமாமுனிவா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினா்.
வீரமாமுனிவா் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் உள்ள வீரமாமுனிவா் திருவுருவச் சிலைக்கு, மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க இளைஞா் அணியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மாவட்ட இளைஞரணிச் செயலா் ஆா்.அடைக்கலராஜ் தலைமை வகித்தாா். இயக்கத்தின் மாவட்டச் செயலா் ஜோசப்சத்தியமூா்த்தி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் அடைக்கலராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பங்கு தந்தை சுவைக்கின், உதவி பங்குத் தந்தை ஆல்வின் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.