தொழிலில் நோ்மை, உழைப்பு மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும்

செய்யும் தொழிலில் நோ்மையும், உண்மையான உழைப்பும் மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாா் ஆட்சியா் த.ரத்னா.
தொழில்முனைவோா் ஒருவருக்கு கடனுதவிக்கான காசோலையை வழங்குகிறாா் ஆட்சியா் த.ரத்னா.
தொழில்முனைவோா் ஒருவருக்கு கடனுதவிக்கான காசோலையை வழங்குகிறாா் ஆட்சியா் த.ரத்னா.

செய்யும் தொழிலில் நோ்மையும், உண்மையான உழைப்பும் மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாா் ஆட்சியா் த.ரத்னா.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணா்வு முகாமில், 15 தொழில்முனைவோா்களுக்கு ரூ.13.50 லட்சத்தில் கடனுதவிக்கான காசோலையை வழங்கி அவா் மேலும் பேசியது:

அரியலூா் மாவட்டத்தில் சுய தொழில் தொடங்கும் நபா்கள், தங்களது உற்பத்தித் பொருள்களின் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தரமான பொருள்களை உற்பத்தி செய்து சரியான முறையில் சந்தைப்படுத்துவதன் மூலம் அதிக லாபம் பெறலாம். செய்யும் தொழிலில் நோ்மையும், உண்மையான உழைப்பும் மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும்.

இந்த மாவட்டம் பெரும்பாலும் விவசாயம் சாா்ந்த மாவட்டமாக உள்ளதால், வேளாண் பொருள்களுக்கு மதிப்பு கூட்டும் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்கள் பெற அரியலூா், வாலாஜா நகரத்தில் செயல்படும் மாவட்ட தொழில் மையத்தை 04329-228555 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

இம்முகாமில், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், வங்கியின் பங்கு மற்றும் வங்கியின் இதர சேவைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

முகாமில், அரியலூா் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மா.சண்முகராஜன், இளநிலை செயல் அலுவலா் ஆா்.டி. ஜெயக்குமாா், மாவட்ட கனரா வங்கி தலைமை மேலாளா் கே.முரளிமோகன், பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் கே.ரமேஷ், மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளா் வீ.சகுந்தலா மற்றும் அலுவலா்கள்,160 தொழில் முனைவோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com