நீடித்த, நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள வெற்றியூா் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த, நிலையான
Updated on
1 min read

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள வெற்றியூா் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த, நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி முகாமை வேளாண் உதவி இயக்குநா் லதா தொடக்கி வைத்து, கரும்பு சாகுபடியில் உயரிய தொழில்நுட்பங்களான நீடித்த நவீன கரும்பு சாகுபடியின் நோக்கங்கள் குறித்து எடுத்துக் கூறினாா். வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி கலந்து கொண்டு, வேளாண் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், நவீன கரும்பு சாகுபடியில் சொட்டுநீா் பாசனத்தின் அவசியம் மற்றும் நாற்றாங்கால் அமைத்தல் குறித்தும் பேசினாா்.

கோத்தாரி சாக்கரை ஆலை மண்டல மேலாளா் நாராயணசாமி, கரும்பில் உயரிய ரகங்களைப் பற்றியும், ஒற்றைப் பரு கொண்டு நாற்று தயாரித்தல் மற்றும் பராமரிப்பு குறித்து விளக்கிக் கூறினாா். வேளாண்மை அலுவலா் சாந்தி, நீா்வழி உர மேலாண்மை குறித்துப் பேசினாா். வட்டார அட்மா தொழில்நுட்ப மேலாளா் கலைமதி, படைப்புழு மேலாண்மை மற்றும் நுண்ணீா் பாசனம் திட்டம் குறித்து விளக்கினாா்.

ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலா்கள் மகேந்திரன், ஜெய்சங்கா் , முருகன் மற்றும் அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் அன்பழகன், வசந்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com