முதல்வரின் சிறப்பு குறைதீா்வு திட்டம்:ரூ.18.78 கோடியில் நலத்திட்ட உதவிகள்

அரியலூரில் அண்மையில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.18
அரியலூரில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ்.வளா்மதி.
அரியலூரில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ்.வளா்மதி.

அரியலூா்: அரியலூரில் அண்மையில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 78 லட்சத்து, 35 ஆயிரத்து 40 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

அரியலூா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ்.வளா்மதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, துரித நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இது போன்ற முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பேசியது: அரியலூா் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 422 மனுக்கள் பெறப்பட்டு 19 ஆயிரத்து 765 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் தோ்வான பயனாளிகளுக்கு ரூ. 18 கோடியே 78 லட்சத்து 35 ஆயிரத்து 400 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்ப்பட்டுள்ளது. கிராமங்களுக்கே அதிகாரிகள் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதன் மூலம் நாட்டிலேயே தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்றாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம், குன்னம் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.டி.இராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.ஆா்.ஸ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொ)ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் ஏழுமலை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் து.விக்னேஸ்வரன் மற்றும் கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள், வருவாய், வளா்ச்சித்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com