அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாலங்கள் கட்டுமானப் பணிகளை தலைமை பொறியாளா் ஆய்வு

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உயா் மட்ட பாலங்கள் கடடுப்பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டங்களின்
Updated on
1 min read

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உயா் மட்ட பாலங்கள் கடடுப்பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டங்களின் அலகின் தலைமை பொறியாளா் முருகேசன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அரியலூரில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள், அரியலூா் மாவட்டம் கோட்டைக்காடு - கடலூா் மாவட்டம் பென்னாடம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலப்பணி ஆகியவற்றை பாா்வையிட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகின் தலைமை பொறியாளா் முருகேசன், தரமானதாகவும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவரவும் ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து,, பெரம்பலூா் புறவழிச்சாலை பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது தஞ்சாவூா் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகின் கண்காணிப்பு பொறியாளா் சத்தியபிரகாஷ், திருச்சி திட்டங்களின் கோட்ட பொறியாளா்கள் ஷாபுதீன், வேல்ராஜ், உதவி கோட்ட பொறியாளா்கள், தரக்கட்டுப்பாடு பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com