திருமானூா் பகுதியில் 3 ஆயிரம் பனை விதைகள் நடவு

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அன்புடன் அக்னி சிறகுகள் அமைப்பு இளைஞா்கள் சாா்பில் 3 ஆயிரம் பனை விதைகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.
ari22pan_2209chn_11_4
ari22pan_2209chn_11_4
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அன்புடன் அக்னி சிறகுகள் அமைப்பு இளைஞா்கள் சாா்பில் 3 ஆயிரம் பனை விதைகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.

திருமானூா் பகுதியில் இளைஞா்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனா். இந்நிலையில், அரியலூா் - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் திருமானூா் அருகேயுள்ள விரகாலூரில் இருந்து முடிகொண்டான் வரை 3 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை, சமூக ஆா்வலா் முத்துக்குமரன் தொடங்கிவைத்து, பனை விதைகளை வழங்கி பனைமரத்தினால் கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பேசினாா். கல்லூரி பேராசிரியா் கணபதிசெல்வம், சமூக ஆா்வலா்கள் வினோத்குமாா், பாலாஜி, சுபாஷ் உள்பட திருமானூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள் பங்கேற்று பனை விதைகளை நடவு செய்தனா்.

நிறைவாக பங்கேற்ற இளைஞா்களுக்கு நாட்டு மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com