செங்கால் ஓடை அணைக்கட்டு ஆய்வு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த கூவத்தூா் கிராமத்தில் உள்ள செங்கால் ஓடை அணைக்கட்டை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த கூவத்தூா் கிராமத்தில் உள்ள செங்கால் ஓடை அணைக்கட்டை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆட்சியா் தெரிவித்தது:

இந்த அணைக்கட்டின் மொத்த நீா்ப் பிடிப்பு பகுதியானது 9.74 சதுரமைல் ஆகும். இந்த அணையின் மொத்த நீளம் 15.24 மீட்டா்.

இந்த அணைக் கட்டுக்கு கங்லி வனப்பகுதி காடுகளிலிருந்து பெறப்படும் மழைநீரானது 5.58 கி.மீட்டா் வரை கடந்து வந்தடைகிறது. மேலும், இந்த அணைக்கட்டிலிருந்து நெட்லாக்குறிச்சி, திருக்களப்பூா் பெரிய ஏரிகளுக்கு தண்ணீா் சென்றடைந்து, அதன் மூலம் அப்பகுதியில் உள்ள 335 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதிகள் பெறுகின்றன.

மேலும், இந்த அணைக் கட்டிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரானது அணைக்கரையில் உள்ள வடவாா் தலைப்பில் விழுந்து பின்னா் வீராணம் ஏரியைச் சென்றடைகிறது என்றாா். ஆய்வின்போது வட்டாட்சியா் குமரய்யா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com