பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியைப் பறித்துச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியைப் பறித்துச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

செந்துறை அருகேயுள்ள இலைக்கடம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வி(45). இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனியே தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 2 போ், கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்தனா். கலைச்செல்வி சப்தமிடவே மா்மநபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். புகாரின் பேரில் செந்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com