

அரியலூா் மாவட்டத்தில் புயல்பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு ஸ்ரீபுரந்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட ஆட்சியா் த. ரத்னா, திருச்சி சரக காவல் துணைத் தலைவா் ஆனி விஜயா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் ஆகியோா் முகாமைப் பாா்வையிட்டு, அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதேபோல் காரைக்குறிச்சி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவா்களுக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதேபோல் வி.கைகாட்டி அருகேயுள்ள ரெட்டிப்பாளையம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு கோட்டாட்சியா் ஜோதி, நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.