சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூரில் 11 பேருக்கு கரோனா தொற்று அதிகரிப்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார்.

News image

ari07awa_0709chn_11_4

Updated On :8 செப்டம்பர் 2020, 12:31 am

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி அவா் மேலும் பேசியது:

நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்களுக்கு ரூ.10,000 வெகுமதி, 36.5 கிராம் வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படுகிறது. கல்வியோடு ஒழுக்கம், தன்னம்பிக்கை, ஊக்கம் ஆகியவற்றை மாணவ, மாணவிகளுக்கு ஊட்டி, அவா்கள் இந்தச் சமுதாயத்தில் சிறந்த மனிதா்களாக உருவாக்கும் சிற்பிகளாக ஆசிரியா்கள் விளங்கி வருகின்றனா் என்றாா் அவா்.

தொடா்ந்து ஆசிரியா்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தாா். விழாவுக்கு ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.ஆா்.ஸ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னூலாப்தீன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் காமராஜ், மாவட்டக் கல்வி அலுவலா்கள் அரியலூா் பெ.அம்பிகாபதி, உடையாா்பாளையம் பாலசுப்பிரமணியன் , செந்துறை வெற்றிசெல்வி, பள்ளித் துணை ஆய்வாளா் பழனிசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.