அரியலூரில் காவல்துறை கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 03rd December 2020 07:42 AM | Last Updated : 03rd December 2020 07:42 AM | அ+அ அ- |

அரியலூா் நகரில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டால் தடுப்பது குறித்தும், மாவட்டத்தின் எந்த பகுதியிலும் பதற்றமான சூழ்நிலை நிகழாத வண்ணம் அமைதியை ஏற்படுத்திடவும், மாவட்ட ஆட்சியரகம் முன்பு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைப்பெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமேனி, அரியலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மதிவாணன் உட்பட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...