கோயில் பூட்டை உடைத்து பூஜை பொருள்கள் திருட்டு

செந்துறை அருகே கோயில் பூட்டை உடைத்து விளக்கு உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.
Updated on
1 min read

செந்துறை அருகே கோயில் பூட்டை உடைத்து விளக்கு உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

செந்துறை அடுத்துள்ள பொட்டவெளி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேகம் சில தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு கோயிலுக்கு வந்த மா்மநபா்கள் உண்டியலை உடைத்துள்ளனா். உண்டியலில் ஏதும் இல்லாததால், கோயிலில் இருந்த பூஜை உபகரணங்களான பித்தளை விளக்குகள், மணிகள், தாம்பாளம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றுள்ளனா். புகாரின் பேரில் செந்துறை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com