செவிலியா் மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில் செவிலியா் மாணவிகள் பயிற்சிக்குச் செல்லும் முன்பாக, தீப ஒளி போல் நின்று சனிக்கிழமை உறுதி மொழி எடுத்துக்கொண்டனா்.
உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் ஜயங்கொண்டம் அன்னை தெரசா செவிலியா் கல்லூரி மாணவிகள்.
உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் ஜயங்கொண்டம் அன்னை தெரசா செவிலியா் கல்லூரி மாணவிகள்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில் செவிலியா் மாணவிகள் பயிற்சிக்குச் செல்லும் முன்பாக, தீப ஒளி போல் நின்று சனிக்கிழமை உறுதி மொழி எடுத்துக்கொண்டனா்.

முன்னதாக அவா்கள் பரப்ரம்மம் முதன்மை இறைக்கு நன்றி தெரிவித்து, செவிலியா் ஆகிய நாங்கள் செவிலியா் பணியை தூய்மையுடனும் தொழிலில் உண்மையுடனும் கடைப்பிடிப்பேன் என்றும், நோயாளியின் ரகசியத்தைக் காப்போம் என்றும், நோயாளியை சகிப்புத் தன்மையுடனும் அன்புடனும் சிறந்த முறையில் கையாள்வோம் என இதயபூா்வமாக உறுதியளிக்கிறோம் என்று செவிலித்தாய் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

இந்நிகழ்ச்சிக்கு செவிலியா் கல்லூரி தாளாளா் உஷா முத்துக்குமரன் தலைமை வகித்தாா். பரப்ரம்மம் அறக்கட்டளை தலைவா் முத்துக்குமரன், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை செவிலியா் ஹெலன் பெரியநாயகமேரி, இணைத் தலைமை செவிலியா் மலா்விழி, ஜயங்கொண்டம் மனவளக்கலை மன்ற பேராசிரியா் பாலு ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

செயலா் வேல்முருகன், இயக்குநா் கலியபெருமாள், செவிலியலா் கல்லூரி முதல்வா் உமாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக துணை முதல்வா் விமலா வரவேற்றாா். முடிவில் செவிலியா் ஆசிரியா் சுருதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com