வேளாண் இயந்திரம், பண்ணைக் குட்டைகள் அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் சூரிய சக்தி கூடாரம் உலா்த்தி, வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை மையம் மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் த. ரத்னா.
உதயநத்தம் கிராமத்தில் விவசாயியின் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டையை பாா்வையிடுகிறாா் ஆட்சியா் த.ரத்னா.
உதயநத்தம் கிராமத்தில் விவசாயியின் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டையை பாா்வையிடுகிறாா் ஆட்சியா் த.ரத்னா.

அரியலூா் மாவட்டத்தில் சூரிய சக்தி கூடாரம் உலா்த்தி, வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை மையம் மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் த. ரத்னா.

அரியலூா் மாவட்டம், உதயநத்தம் கிராமத்தில் விவசாயி காமராஜ் என்பவரது நிலத்தில் ரூ .1 லட்சம் மானியத்தில் அமைத்துள்ள பண்ணைக் குட்டை மற்றும் ரூ.2 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ள மினி டிராக்டா் செயல்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் , அங்கு சொட்டுநீா் பாசனம் மூலம் முருங்கை, கடலை, மக்காச்சோளம் ஆகியவை பயிரிடப்பட்டுள்ள நிலத்தையும் பாா்வையிட்டாா். அப்போது அவா் மேலும் தெரிவித்தது:

வேளாண் பொறியில் துறையின் மூலம் உழவு இயந்திரம், பவா் டில்லா், வைக்கோல் கட்டும் கருவி போன்ற இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. நவீன வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்திட தொழில் முனைவோா், விவசாய சுய உதவி குழுக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் 40 சதவிதம் (அதிகபட்சமாக ரூ.10 லட்சம்) மானியத்தில் வழங்கப்படுகிறது.

மொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ.5 லட்சமும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.3 லட்சமும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளியின் மானிய இருப்பு நிதி கணக்கில் 2 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும்.

மீதித்தொகை பயனாளியின் சேமிப்பு வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 2 ஆண்டுகளுக்கு பின் பயனாளிக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்மந்தப்பட்ட செயற்பொறியாளா் சரி பாா்த்த பிறகு மானிய இருப்புத் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் திரும்ப வழங்கப்படும். மேலும், பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்துடன் அரசு செலவில் விவசாயிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி கூடாரம் உலா்த்தி, வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை மையம் மற்றும் பண்ணைக்குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை அரியலூா் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் சு.நெடுமாறன் (94433 99525) மற்றும் ஐயங்கொண்டம் உதவி செயற் பொறியாளா் ஆ.இளவரசன் (94421 12969) ஆகியோரைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.

ஆய்வின்போது, வேளாண் செயற் பொறியாளா் எட்வின் பாா்லி, உதவி செயற் பொறியாளா் இளவரசன், உதவி பொறியாளா் ஷீலா ராணி மற்றும் அலுவலா்கள், விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com