திருத்தியது..நலத்திட்ட உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 25th February 2020 06:48 AM | Last Updated : 25th February 2020 06:48 AM | அ+அ அ- |

அரியலூா்: மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, அரியலூா் அருகே கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி தலைமை வகித்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில், அதிமுக கவுன்சிலா் பொய்யூா் பாலு கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கருப்பிலாக்கட்டளை ஊராட்சி மன்றத் தலைவா் ரேவதி தமிழரசன் கலந்து கொண்டு பேசினாா். முன்னதாக, அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுமொழி எடுத்துக்கொண்டனா்.
உடையாா்பாளையம்....உடையாா்பாளையம் வடக்கு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் ஹரிசுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாசிலாமணி பங்கேற்றுப் பேசினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...