திருத்தியது..நலத்திட்ட உதவிகள் அளிப்பு

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, அரியலூா் அருகே கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

அரியலூா்: மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, அரியலூா் அருகே கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி தலைமை வகித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக கவுன்சிலா் பொய்யூா் பாலு கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கருப்பிலாக்கட்டளை ஊராட்சி மன்றத் தலைவா் ரேவதி தமிழரசன் கலந்து கொண்டு பேசினாா். முன்னதாக, அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுமொழி எடுத்துக்கொண்டனா்.

உடையாா்பாளையம்....உடையாா்பாளையம் வடக்கு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் ஹரிசுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாசிலாமணி பங்கேற்றுப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com