பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அரியலூரில் கல்லூரி மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு
Updated on
1 min read

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அரியலூரில் கல்லூரி மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூா் கல்லூரிச் சாலையில் வைத்திருந்த மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு அதிமுக வழக்குரைஞா் சாந்தி மலா் தூவி மரியாதை செலுத்தி, கல்லூரி முடிந்து வந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.

தொடா்ந்து அவா், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பாலியல் தொந்தரவு, குழந்தைத் திருமணம் உள்ளிட்ட சட்டத் திட்டங்கள் குறித்து மாணவ,மாணவிகளிடையே விளக்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில் அரியலூா் அரசு கலைக் கல்லூரி மாணவ,மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com