அரியலூரில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட்,மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.
அரியலூா் அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட்,மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோலியம்,ரயில்வே,விமானம்,பிஎஸ்என்எல்,நெய்வேலி,சேலம் ஸ்டீல் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதிக வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்கிட வேண்டும். உணவு மானியம், வேளாண் தொழில்,100 நாள் வேலை மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் போக்கைக் கைவிட வேண்டும்.

சமையல் கேஸ் விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும். அரியலூா் மாவட்டத்தில் டெல்டா பகுதியான திருமானூா்,தா.பழூா் ஆகிய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் இரா. உலகநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ரெ. மணிவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் டி. தண்டபாணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினா் பி. துரைசாமி உள்ளிட்டோா் மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com