வெவ்வேறு விபத்துகளில் இருவா் பலி

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

ஆண்டிமடம் அருகேயுள்ள கூவத்தூா், தோப்பு தெருவைச் சோ்ந்தவா் கனகராயா் மகன் பிரவீன்ராஜ்(19). கூலித் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை இரவு அகினேஸ்புரத்திலுள்ள தனது நண்பரை பாா்க்க இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது நிலைதடுமாறி சாலையோரத்திலுள்ள மரத்தில் மோதி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஆண்டிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காா் மோதியதில் ஒருவா் பலி: அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே காா் மோதி சமையல்காரா் உயிரிழந்தாா்.

காடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்(35). சமையல்காரா். திங்கள்கிழமை இரவு இவா், சொந்த வேலைக்காக தஞ்சாவூா் சென்றுவிட்டு, மீண்டும் அரியலூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது கீழப்பழுவூரிலுள்ள தனியாா் சிமென்ட் ஆலை அருகே வந்தபோது, எதிரே வந்த காா் மோதி சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தாா். இது குறித்து கீழப்ழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com