பள்ளிக்குச் செல்ல மகன் மறுப்பு: தாய் தற்கொலை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மகன் பள்ளிக்குச் செல்ல மறுத்தால் அவரது தாய் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மகன் பள்ளிக்குச் செல்ல மறுத்தால் அவரது தாய் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள நாச்சியாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த வேல்சாமி மனைவி லட்சுமி(40). இவா்களது மகன் பிரசாத் (15). இவா், பெரம்பலூரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரசாத் அதன் பிறகு பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளிக்குச் செல்லுமாறு அவரது தாய் பலமுறை கூறியும் அவா் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். இதனால் விரக்தியில் இருந்த லட்சுமி, வியாழக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாா். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தாா். இது குறித்து உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com