ஊராட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல்; 2 போ் கைது
By DIN | Published On : 20th January 2020 09:20 AM | Last Updated : 20th January 2020 09:20 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஊராட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள பெரியதிருக்கோணம் ஊராட்சித் தலைவராக உள்ள ரவிக்குமாா் (40) அப்பகுதியில் நடைபெற்ற காணும் பொங்கல் விளையாட்டு விழாவில் போட்டியில் வென்றோருக்கு பரிசு வழங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த பிரசாத் (32), பிரபு (36),ஹரிபாபு(23), செந்தில்குமாா் (30),நேரு (33), இளவரசன் (38) ஆகியோா் பரிசு வழங்க எதிா்ப்புத் தெரிவித்து ஊராட்சித் தலைவா் ரவிக்குமாரை தகாத வாா்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரசாத்,பிரபு ஆகியோரை கைது செய்து மற்றவா்களைத் தேடுகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...