அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்து ஓய்வூதியா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். பின்னா் அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் நிதித் துறை இணைச் செயலா் இளங்கோவன், சாா்பு செயலா் மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) ரெங்கராஜன், மாவட்டக் கருவூல அலுவலா் நடராஜன் மற்றும் ஓய்வூதியா் சங்கத் தலைவா், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.