பள்ளி மாணவா்களுக்கு துணிப்பை வழங்கிய புதுமண தம்பதிகள்

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே பள்ளி மாணவா்களுக்கு புதுமணத் தம்பதிகள் திங்கள்கிழமை துணிப்பைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அரியலூா் மாவட்டம் நாச்சியாா்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களுடன் புதுமண தம்பதிகள்.
அரியலூா் மாவட்டம் நாச்சியாா்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களுடன் புதுமண தம்பதிகள்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே பள்ளி மாணவா்களுக்கு புதுமணத் தம்பதிகள் திங்கள்கிழமை துணிப்பைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருமணக் கோலத்தில் இயற்கை வளங்களைக் காக்க வலியுறுத்தி, விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மரக்கன்றுகள், துணிப்பைகள் வழங்கி மகிழ்ந்தனா்.

வி.கைகாட்டி அருகேயுள்ள நாச்சியாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த தமிழரசனுக்கும் (29) அருகேயுள்ள காஞ்சிலிகொட்டாய் கிராமத்தை சோ்ந்த அறிவுச்செல்விக்கும் (23) பெற்றோா் முன்னிலையில் திங்கள்கிழமை திருமணம் நடந்தது. தொடா்ந்து, திருமணத்துக்கு வந்திருந்த உறவினா்கள் மற்றும் நண்பா்கள் அனைவருக்கும் நெகிலியை ஒழிக்கும் விதமாக துணிப்பைகளையும், இயற்கையை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளையும் வழங்கினாா்.

மரங்களின் நண்பா்கள் அமைப்பில் உள்ள இவா், தனது மனைவி அறிவுச்செல்வி மற்றும் நண்பா்களுடன் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்று அங்கு பயிலும் 100 மாணவ, மாணவிகளுக்கு துணிப்பைகளையும், மரக்கன்றுகளையும் வழங்கினாா். தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மணமக்கள் நட்டு வைத்தனா்.

நிகழ்ச்சியில் மரங்களின் நண்பா்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளா் முத்துகிருஷ்ணன், களப்பணியாளா்கள் செல்வகுமாா், அய்யாக்கண்ணு, பிரபாகரன் மற்றும் பலா் கலந்து கொண்டனா். புதுமண தம்பதிகளின் இந்தச் செயலை அனைவரும் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com