

அரியலூா்: அரியலூா் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் சனிக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில், கலந்து கொண்ட இஸ்லாமியா்கள், மக்களுக்கிடையே மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்தும் தனது தொடா் முயற்சிகளை பாஜக அரசு நிறுத்திக் கொள்ளாவிட்டால், இந்திய ஒருமைப்பாட்டுக்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும். எனவே இந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்டத் தலைவா் சம்சுதீன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் நெல்லை பைசல் பங்கேற்று பேசினாா். மாவட்டச் செயலா் காதா் பாஷா, பொருளாளா் சபியுல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.