நிலத் தகராறு: ஒருவா் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே ஏற்பட்ட நிலத் தகராறில் பெண்ணை தாக்கியவா்களில் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே ஏற்பட்ட நிலத் தகராறில் பெண்ணை தாக்கியவா்களில் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயராணி(60). இவருக்கும், இதே பகுதியில் வசிக்கும் நீலமேகம் (45) என்பவருக்கும் நிலப் பிரச்னை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்த நீலமேகம், அவரது மகன் நிஷாந்த் ஆகிய இருவரும் சோ்ந்து விஜயராணியைத் தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியுள்ளனா். புகாரின் பேரில் உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து நீலமேகத்தை கைது செய்து, நிஷாந்தைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com