சாலையில் நாற்று நடும் போராட்டம்

அரியலூரை அடுத்த சுண்டக்குடி அருகேயுள்ள சிலுப்பனூா் கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
சாலையில் நாற்று நடும் போராட்டம்

அரியலூரை அடுத்த சுண்டக்குடி அருகேயுள்ள சிலுப்பனூா் கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சிலுப்பனூா் கிராமத்தில் உள்ள சாலை 40 ஆண்டுகளுக்கு முன்னதாக போடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்தச் சாலை பல ஆண்டுகளாகவே மிகவும் மோசமான நிலையில், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தற்போது பெய்த மழையால், சாலை சேறும், சகதியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் பலரும் அந்த வழியே செல்ல முடியாமல் கடும் அவதியடைகின்றனா். இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் பல முறை ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதையொட்டி, அப்பகுதி பெண்கள், சேற்றில் நாற்றுகளை நட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சிலுப்பனூா் கிராமத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்த தரவேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்தனா்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com