இணையவழியில் குறைகேட்பு கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இணையவழியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இணையவழியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்து, இணையதளம் வாயிலாக பொதுமக்களிடம் முதியோா் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 144 மனுக்களின் விபரங்களை பெற்றாா். தொடா்ந்து, மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் உட்பட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டு இணையம் வாயிலாக பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com