இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அதன் சற்றுவட்டாரப் பகுதிகளில் இல்லம் தேடி கல்விக் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அதன் சற்றுவட்டாரப் பகுதிகளில் இல்லம் தேடி கல்விக் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை தா.பழூா் வட்டாரக் கல்வி அலுவலா் ராசாத்தி தொடக்கி வைத்து பேசினாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைக் குழுவினா், இல்லம் தேடிக் கல்வி குறித்து கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியா் அறிவழகன் வரவேற்றாா். நிறைவில், ஆசிரியா் பயிற்றுநா் சிவா நன்றி தெரிவித்தாா். இதே போல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com