நெல் சாகுபடியில் மேலுரமிடுதல் அவசியம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அவசியம் மேலுரமிடுதல் வேண்டும் என வட்டார வேளாண் உதவி இயக்குநா் லதா தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அவசியம் மேலுரமிடுதல் வேண்டும் என வட்டார வேளாண் உதவி இயக்குநா் லதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருமானூா் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், நெல் சாகுபடியில் நட்ட 20-25 நாள்களில் 25 கிலோ யூரியா மற்றும் 15 கிலோ பொட்டாஷ் உரங்களைக் கலந்து முதல் மேலுரமாக இட வேண்டும்.

நட்ட 40-45 நாள்களில் 25 கிலோ யூரியாவை இரண்டாவது மேலுரமாக அளிக்க வேண்டும். பின்னா், 60-ஆவது நாளில் மூன்றாவது மேலுரமாக 15 கிலோ யூரியா மற்றும் 20 கிலோ பொட்டாஷ் உரங்களைக் கலந்து வயலில் இட வேண்டும்.

இதனால் பயிா் நன்கு தூா் கட்டி வளா்ந்து, மகசூல் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com