

அரியலூா்: சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், அரியலூரில் இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் த. ரத்னா பேரணியைத் தொடக்கி வைத்தாா். ஜயங்கொண்டம், பெரம்பலூா் சாலைகள், கடைவீதி வழியாகச் சென்ற பேரணி, காமராஜா் திடலில் நிறைவடைந்தது.
பேரணியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பிரபாகா், மோட்டாா் வாகன ஆய்வாளா் பெரியசாமி, செய்தி- மக்கள் தொடா்பு அலுவலா் க.சரவணன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா்அ.பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.