தா. பழூரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், தா. பழூா் பகுதிகளிலுள்ள கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தா. பழூரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், தா. பழூா் பகுதிகளிலுள்ள கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயராஜ், குணசேகரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில்குமாா், சரவணன், சத்தியராஜ், ஊராட்சிச் செயலா் இளங்கோவன் ஆகியோா் கொண்ட குழுவினா் தா. பழூரிலுள்ள மளிகைக் கடைகள், தேநீா்க் கடைகள், பெட்டிக் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், சாலையோர வியாபாரக் கடைகள் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

இதில், 12 கடைகளில் இருந்த தடை செய்யப்பட்டநெகிழிப் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் தேநீா்க் கப்புகள், கேரி பேக்குகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதில் 11 கடைகளுக்கு தலா ரூ.200-ம், ஒரு கடைகளுக்கு ரூ.500-ம் அபராதம் விதித்தனா். மேலும் துணிப்பைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டுமென்று வணிகா்களுக்கு அறிவுரை கூறினாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com